கொடநாடு வழக்கை பயன்படுத்தி அதிமுகவை அச்சுறுத்த முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
கொடநாடு வழக்கை பயன்படுத்தி அதிமுகவை அச்சுறுத்த முடியாது. கொடநாடு வழக்கை சட்டப்படி சந்திப்போம். வார்த்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அரசியல் பண்பாடு கருதி நாங்கள் அவ்வாறு பேசுவதில்லை.
அரசியலில் அநாகரீகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.பாரதி பயன்படுத்துகிறார். அரசியலில் பண்பாடு வேண்டும். பதவி பெறுவதற்காக அதிமுகவை பற்றி அவர் விமர்சனம் செய்கிறார். அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை திருப்தி அடைய வைத்து பதவி வாங்க நினைக்கிறார்.
கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தினால் ஒத்துழைப்பு தருவோம். மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.