Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'பாஜக பேச்சு சுதந்திரமே இல்லாமல் செய்துவிட்டது' - காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு!

    ‘பாஜக பேச்சு சுதந்திரமே இல்லாமல் செய்துவிட்டது’ – காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு!

    பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லாமல் செய்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

    ஜார்கண்ட் மாநிலம், சஹேப்கஞ்ச் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேரணி ஒன்றில் கலந்துகொண்டார். இந்தப் பேரணியில் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாகூர் உள்ளிட்ட பல காங்கிரஸ் நிர்வாகிகள்  கலந்துகொண்டனர். 

    அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை எனவும், தைரியமாக யாராவது பேச முன்வந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். 

    தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதாக கூறியதாகவும் ஆனால், இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி தொடர்ந்து கடுமையாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். 

    மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே மக்களிடம் வீடு வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாகவும், அதன் மூலமாக மத்திய அரசு மக்களுக்கு எதிராக இருப்பதை தெரியப்படுத்த இருப்பதாகவும் கூறினார். 

    மனைவியை தாக்கிய கணவன்; குறுக்கே வந்த காவல்துறை மீதும் தாக்குதல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....