Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்லீக் ஆன நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண பத்திரிகை; கல்யாணம் இங்கேதானா?

    லீக் ஆன நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண பத்திரிகை; கல்யாணம் இங்கேதானா?

    தென்னிந்தியத் திரையுலகினர் கூடி, மனதார வாழ்த்தும் திருவிழா ஒன்று ஜூன் 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. ஆம்! தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்தான் அந்த திருவிழா.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமல்லாது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி சமந்தா ஆகியோருடன் நடித்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

    இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தின் நடித்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்த நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் காதலனுடன் வெளியில் செல்வது வெளிநாடு சுற்றுலா செல்வது என ஜாலியாக சுற்றி திரிந்து வந்தார். இவர்கள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தி்ல் வைரலாக பரவியது.

    பத்திரிகை

    ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்கி நயன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது அவர்கள் திருமண பத்திரிகை இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதில் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் தான் திருமணம் நடக்கிறது என குறிப்பிட்டு இருக்கின்றனர். இதன் மூலமாக அவர்கள் திருமணம் எங்கு நடக்கிறது என்கிற கேள்விக்கு ஒரு வழியாக பதில் கிடைத்துவிட்டது.

    இவர்களின் திருமண பத்திரிகை தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது.திருமணத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு கோவில்களில் விக்கி – நயன் இருவரும் பூஜைகள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கியான்வாபி வழக்கில் புதிய திருப்பம்..! கசிந்த காணொளியில் இருந்த திரிசூலக் குறியீடு..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....