நானே வருவேன் ஓடிடியில் அக்டோபர் மாத இறுதியில் வருவான் என தகவல் வெளிவந்துள்ளது.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், நானே வருவேன். தனுஷ் இரு வேறு கதாப்பாத்திரங்களில் காட்டும் வேறுபாடும் தோரனையும் பார்ப்போரை மிரளச்செய்கிறது. செல்வராகவன் இயக்கத்தோடு இல்லாமல், நடிகராகவும் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார்.
நானே வருவேன் திரைப்படமானது கடந்த செப்டம்பர் 29-ம் தேதி திரைக்கு வந்தது. மறுநாள் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்ததாலும், நானே வருவேன் கலவையான விமர்சனங்களை பெற்றதாலும் நானே வருவேன் திரையரங்குகளில் வெற்றி மூச்சு விடவில்லை.
இந்நிலையில், நானே வருவேன் திரைப்படம் ஓடிடியில் இம்மாதம் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பெரிதாக ரசிகர்களை சென்று சேராமல் விட்ட திரைப்படம், தற்போது ஓடிடியில் அதிக ரசிகர்களை சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:5ஜி அதிவேக இணையதள சேவை; தகவல் தொழில்நுட்பத் துறைகளின் உயர் அதிகாரிகள் கூட்டம் அறிவிப்பு