நாட்டின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை பரிசாக வழங்கியுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான மனோஜ் மோடி என்பவர் முகேஷ் அம்பானியின் ஆரம்பக் காலத்தில் இருந்தே நண்பராக இருந்து வருகிறார். மேலும் முகேஷ் அம்பானியும், மனோஜ் மோடியும் மும்பை பல்கலைக்கழகத்தில் ஒன்றாக கெமிக்கல் டெக்கனாலஜியை பயின்றனர்.
இதைத்தொடர்ந்து 1980 ஆம் காலகட்டங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அடியெடுத்து வைத்த மனோஜ் மோடி, பல ஆண்டுகளாக முகேஷ் மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானியின் நம்பிக்கைக்குரிய நண்பராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு மும்பை நேப்பியர் கடற்கரை சாலை பகுதியில், 1.7 லட்சம் சதுர அடி கொண்ட 22 மாடி சொகுசு அடுக்குமாடி பங்களாவை முகேஷ் அம்பானி பரிசாக அளித்துள்ளார். இதன் மதிப்பு 1500 கோடி ரூபாய் ஆகும்.
இந்த 22 மாடியில் 7 மாடிகள் கார் நிறுத்தத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டிற்கு தேவையான மரச்சாமான்கள் மற்றும் உபயோகப் பொருட்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை பேசி முடிப்பதில் மனோஜ் மோடி முக்கிய மூலக்காரணமாக செயல்பட்டவர். மேலும் குறிப்பாக 2020 ஆம் ஆண்டு பேஸ்புக்-ஜியோ ஒப்பந்தத்தை முடிவு செய்ததில் இவரது பங்கு முக்கியவத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலர் படுகொலைக்கு திமுக அரசே காரணம் – சீமான் கண்டனம்!