Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இயக்குநர் ராமின் 'ஏழு மலை ஏழு கடல்' படம் குறித்து வெளிவந்த அப்டேட்..

    இயக்குநர் ராமின் ‘ஏழு மலை ஏழு கடல்’ படம் குறித்து வெளிவந்த அப்டேட்..

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடிப்பில் உருவாகி வரும் ஏழு மலை ஏழு கடல் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    இந்திய திரையுலகில் மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்படுபவர்களில் ஒருவர்தான், இயக்குநர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என இவர் எடுத்த அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாக நற்பெயர் பெற்றவையே. 

    இதையடுத்து, தரமணிக்கு பிறகு ராம் இயக்கும் திரைப்படம் குறித்து தொடர்ந்து பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. அச்சமயத்தில்தான், நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடிப்பில் ராம் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. 

    பல நாள்களாக படப்பிடிப்பில் இருந்த திரைப்படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளிவந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஏழு மலை ஏழு கடல் என்று பெயரிடப்பட்டது. 

    பொதுவாகவே, காதல் கதைகளில் எனக்காக நீ ஏழு மலை, ஏழு கடல் தாண்டி வருவாயா என்றும், உனக்கா நான் ஏழு மலை, ஏழு கடல் தாண்டி வருவேன் என்றும் சொல்வது இயல்பான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் இயக்குநர் ராம் தனது படத்திற்கு அதையே தலைப்பாக தேர்வு செய்திருப்பது ஆச்சரியத்தை வரவழைத்தது. 

    இந்நிலையில், ஏழு மலை ஏழு கடல் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், திரைப்படம் விரைவில் திரைக்கு வருமென்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

    நண்பருக்கு 1500 கோடி ரூபாய் மதிப்பில் வீட்டை பரிசாக வழங்கிய முகேஷ் அம்பானி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....