Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமுகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு மீண்டும் கொலை மிரட்டல்! மர்ம நபரால் மும்பையில் பரபரப்பு

    முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு மீண்டும் கொலை மிரட்டல்! மர்ம நபரால் மும்பையில் பரபரப்பு

    மர்மநபர் ஒருவர் முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    மும்மை கிரிகாவ் பகுதியில் ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்று மதியம் 12.57 மணிக்கு மர்ம நபர் ஒருவர் ஃபோன் செய்தார். அந்த மர்ம நபர் மருத்துவமனையை குண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தார். 

    இதைத்தொடர்ந்து, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கும் அவர் கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அவர் ஃபோன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். 

    இதையும் படிங்க:வெற்றிமாறன் இயக்கத்தில் ராஜராஜ சோழன், பிரபாகரனின் வரலாற்று படம் ? சீமான் போட்ட ட்வீட்டால் பரபரப்பு

    இந்நிலையில், இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். அம்பானி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோல் ஒரு மர்ம நபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நகை கடைக்காரர் ஒருவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....