தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன்படி, இதுவரை நடைபெற்ற இரு இருபது ஓவர் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
மதியம் 2 மணியளவில் இந்த ஒருநாள் போட்டியானது தொடங்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், லக்னோவில் காலை முதல் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விரைவில் போட்டி தொடங்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு ஷிகர் தவான் தலைமை தாங்குகிறார். இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது போலவே ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.