கோவையில் அரசு பேருந்தின் பின்பக்கத்தைப் பிடித்து கொண்டு வெளிநாட்டவர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் வீலில் பயணிக்கும் காணொளி ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் சாகசம் செய்யும் காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோவையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், ஆபத்தை உணராமல் அரசு பேருந்தின் பின்புறத்தில் உள்ள ஏணியைப் பிடித்து கொண்டு, ஸ்கேட்டிங் செய்து பயணம் செய்துள்ளார்.
இதையும் படிங்க:மகள் செந்தாமரையுடன் “சாய்பாபா” காலில் விழுந்து தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்!
கோவை மாவட்டம், குளிர் பிரதேச பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. இதனால், இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் மிக முக்கிய சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டம், கோவையை ஒட்டி உள்ளது என்பதாலும், இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் வேறு பகுதிக்குச் செல்வதற்காக அரசு பேருந்தின் பின்புறம் உள்ள ஏணியைப் பிடித்துக் கொண்டு, ஸ்கேட்டிங் வீலில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆபத்தை சிறிதும் உணராமல் பயணித்துள்ளார்.
கோவையின் முக்கிய சாலைகளில் ஒன்றான அவிநாசி சாலையில், இவ்வாறு அவர் சாகசம் மேற்கொண்ட காணொளி, தற்போது இணைய தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.