தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் என்று உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21-ஆம் தேதி தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளில், உலகெங்கும் தங்களது மொழிகளுக்காக உழைத்தவர்களுக்கு, இன்னுயிரைத் தந்தவர்களை நினைவு கூர்வர். வீர வணக்கம் செலுத்துவர். பல நாடுகளில் தங்களுக்கு பிடித்த இலக்கியவாதிகளின் பெருமைகளை சிலாகிப்பர்.
இந்நிலையில், தாய்மொழி தினம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் – உயிர்! உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்!’ என தெரிவித்துள்ளார்.
மேலும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்!’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த நடனக் கலைஞர் குழு!