Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த நடனக் கலைஞர் குழு!

    சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த நடனக் கலைஞர் குழு!

    சிவகார்த்திகேயன் மற்றும் மாவீரன் படக்குழுவுக்கு நடன கலைஞர்கள் சங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. 

    டாக்டர், டான் என வரிசையாக வெற்றித்திரைப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படத்தின் மூலம் சற்றே சறுக்கலை சந்தித்தார். இதைத்தொடர்ந்து, இந்த சறுக்கலுக்கு நேரெதிராக வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் இயங்கி வருகிறார். 

    சிவகார்த்திகேயன் தற்போது, தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மடோனா அஸ்வின் முன்னதாக யோகிபாபு நடிப்பில் ‘மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

    வித்தியாசமான கூட்டணியாக சிவகார்த்திகேயன்-மடோனா அஸ்வின் கூட்டணி இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், மாவீரன் திரைப்படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். இதில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். 

    தெலுங்கு மற்றும் தமிழில் பைலிங்குவல் முறையில் உருவாகி வரும் இப்படம், தெலுங்கில் ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். 

    இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலாக ‘சீன் ஆ சீன் ஆ’ பாடல் வெளியானது. இப்பாடலில் 500-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பலர் இருந்தனர். ஒரு கொண்டாட்டத் தோரனையில் இப்பாடல் இருந்தது. 

    இந்நிலையில், இதற்கு நடன கலைஞர்கள் சங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. நடன கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் சின்னி பிரகாஷ், பாபு, மாரி ஆகியோர் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மடோன் அஷ்வின், தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோரைப் பாராட்டியுள்ளனர்.

    லவ்டுடே ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ்: வெளியான மேக்கிங் வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....