பேருந்து நிலையம் ஒன்றின்மேல், பெரிய குவிமாடமும் அதன் இரு பக்கங்களிலும் சிறிய அளவில் இரண்டு குவிமாடங்களும் உள்ளதால் அதுவொரு மசூதி தான் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் தெரிவித்ததோடு, அதை இடிக்க போவதாகவும் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்தப் புகைப்படங்களை வைத்து பார்க்கும்பொழுது, மைசூர்-ஊட்டி சாலையில் உள்ள ஒரு பேருந்து நிலையம் என தெரிகிறது.
இது தொடர்பாக பேசிய கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா, “சமூக வலைத்தளங்களில் நான் அதை பார்த்தேன். அந்த புகைப்படத்தில் பேருந்து நிலையத்தின் மேல் பெரிய குவிமாடமும் அதன் இரு பக்கங்களிலும் இரண்டு சிறிய அளவிலான குவிமாடங்களும் உள்ளன. அது ஒரு மசூதி தான். இன்னும் 3, 4 நாட்களில் அந்தக் கட்டடத்தை இடிக்குமாறு பொறியாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். அதனை அவர்கள் செய்யவில்லை என்றால், அதை நானே புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்குவேன்” என தெரிவித்தார்.
“Have seen photos of bus stop with #Gumbaz (dome). If there is a big Gumbaz with smaller ones around it then it’s a #Masjid. I have asked officials to remove it, else I will #Bulldoze it myself,” says #BJP leader & #Mysuru & #Kodagu MP #PratapSimha in a speech.#Karnataka pic.twitter.com/gs2ww44bvR
— Hate Detector 🔍 (@HateDetectors) November 14, 2022
ஒரு நாடளுமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர் சலீம், இது மைசூரு நாடாளுமன்ற உறுப்பினரின் முட்டாள்தனமான கருத்து. அப்படி என்றால் குவிமாடம் இருக்கும் அரசு அலுவலகங்களையும் அவர் இடித்துவிடுவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா காலமானார்