நமீபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 12 முதல் 14 சிறுத்தைகள் கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்தநாள் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நமீபியாவிலிருந்து தனி விமானம் மூலமாக 8 சிறுத்தைகள் அழைத்து வரப்பட்டன.
அந்த 8 சிறுத்தைகளை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய வன விலங்கு உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி தன் பிறந்த நாளன்று திறந்து விட்டார்.
நமது நாட்டில் முற்காலத்தில் வேட்டையாடி அழிந்து போன சிறுத்தை இனத்தை மீண்டும் உருவாக்க ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவிலிருந்து ஐந்து ஆண் சிறுத்தைகளும் 3 பெண் சிறுத்தை குட்டிகளும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. இந்தப் சிறுத்தைகள் வேட்டையாடி தங்களின் உணவை எடுத்துக்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், நமீபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 12 முதல் 14 சிறுத்தைகள் கொண்டுவரப்படும் என மத்திய வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சிறுத்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்புக்காக 17 கோடி ஒதுக்கம்; இடம்பெற்ற பத்து பொருட்கள்!