தமிழக முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு முதல்வர் அண்ணன் மரியாதைக்குரிய திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பூரண உடல் நலத்துடன் விரைவில் குணமைடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் நலமடைய வேண்டும். அரசு நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என்று விழைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் நலமடைய வேண்டும்; அரசு நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என்று விழைகிறேன்.@CMOTamilnadu @mkstalin
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 12, 2022
தமிழக முதலமைச்சர் அண்ணன் மரியாதைக்குரிய திரு @mkstalin அவர்கள் பூரண
உடல் நலத்துடன் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 13, 2022