தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் திருச்சியில் இருந்து சென்னைக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதனப் பெட்டியில் நேற்று இரவு பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு சமயத்தில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, உடனடியாக ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, ரயில்வே காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் தனசேகரன், அமைச்சரை பத்திரமாக காரில் அழைத்துச் சென்று சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுவரை வெளிவந்துள்ள தகவலின்படி, அவருக்கு ரத்த அழுத்தம் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:விரைவில் குரூப்-2 தேர்வு முடிவுகள் – அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி