ஆய்வுப் பணிக்கு சென்றபோது நாற்காலி எடுத்து வர கால தாமதம் ஆனதால், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொண்டர் மீது கல் வீசிய சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நாளை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இந்தப் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அங்கு சென்றிருந்தார். அப்போது கட்சித் தொண்டர்களிடம் நாற்காலிகளை எடுத்து வரக் கூறினார்.
அங்கு கட்சி நிர்வாகிகள் அதிகமானோர் இருந்த நிலையில், ஒரு சில நாற்காலிகள் மட்டுமே எடுத்துவரப்பட்டது. மேலும் இதில் கால தாமதமும் ஏற்பட்டது. இதன் காரணமாக கோபம் அடைந்த அமைச்சர் நாசர் கீழே கிடந்த கல்லை தூக்கி தொண்டர் மீது வீசினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
#திருவள்ளூர் நகரில் நடைபெறும் முதல்வர் நிகழ்ச்சி குறித்து ஆய்வு செய்ய வந்த இடத்தில் உட்கார
நாற்காலி தாராத உபி ஒருவரை #கல்லை_தூக்கி_அடிக்கும்
அமைச்சர் #நாசர் @Avadi_Nasar.. மக்கள் சேவகர்.. பொது வெளியில் நடக்கும் விதம்…@BJPian2 @army_ctr pic.twitter.com/U7LZ4pEVb7— Arulkumar Karuppannan (@ArulkumarBjp) January 24, 2023
‘துணிவு’ பட பாணியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் கைது