மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த மருத்துவர்கள் 4 பேரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பிரிவிற்கு சென்ற அமைச்சர் அவர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் 4 பேர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, பணிக்கு வராமல் விடுப்பு எடுத்ததால் அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இதையடுத்து மருத்துவர்கள் 4 பேரும் சஸ்பெண்ட் அதாவது பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் ஆய்வுக்கு பின் மருத்துவமனையை சரியாக கண்காணிக்காமல் மெத்தனமாக செயல்பட்ட மாவட்ட மருத்துவ இணை இயக்குனரையும் பணியிட மாற்றம் செய்தார். இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பாக சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் அங்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய பேறுகால, பச்சிளங் குழந்தை சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து, பல் மருத்துவ சிகிச்சை பிரிவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்டவற்றையும் தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
ஆளுநரின் அலட்சியத்தை தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது- பாமக தலைவர்