தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது டெங்கு மற்றும் இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், சென்னை ஆழ்வாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இரண்டு நாள்களேனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல! அண்ணாமலை எச்சரிக்கை