உலகக் கோப்பையுடன் உறங்கிய மெஸ்ஸியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கத்தாரில், நடந்து வந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது நேற்றுடன் முடிவடைந்தது. இப்போட்டியின் ஆரம்பத்தில், தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகள் என மொத்தம் 32 அணிகளுடன் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 18-ஆம் தேதி முடிவடைந்தது.
இந்த இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாத அளவு இந்த இறுதிப்போட்டியானது இருந்தது.
இரு அணியினரும் திரும்ப விளையாட, இறுதியில் பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது.
உலகக் கோப்பையை வெல்வதென்பது அர்ஜென்டினாவில் நெடுங்கால கனவு. மேலும், அந்நாட்டு அணியின் நட்சத்திர நாயகன் மெஸ்ஸி பங்கேற்கும் இறுதி உலகக் கோப்பை போட்டி இதுவென்பதால், அவரும் தன் நாட்டுக்கு உலகக் கோப்பையை வென்றுவிட்டுதான் செல்ல வேண்டும் என கனவுகண்டு போராடினார். இப்படியான கனவுகள் தற்போது நிறைவேறியுள்ளது.
View this post on Instagram
இந்நிலையில், கால்பந்து இறுதிப்போட்டி நிறைவுற்ற தினத்தின் இரவு வெற்றிக்கோப்பையுடன் உறங்கிய மெஸ்ஸியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இப்புகைப்படத்துக்கு லைக்குகளை தந்த வண்ணம் உள்ளனர்.
மேயர் பிரியா தலைமையில் இந்த மாதத்திற்கான மாமன்றக் கூட்டம் எப்போது?