கால்பந்து வீரர் மெஸ்ஸி தான் கையெழுத்திட்ட டீ-சர்ட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகளுக்கு பரிசளித்துள்ளார்.
சமீபத்தில் கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்று, கோப்பையை தன் வசப்படுத்தியது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவாவுக்கு தான் கையெழுத்திட்ட அர்ஜென்டினா அணியின் டீ-சர்ட்டை மெஸ்ஸி பரிசாக அனுப்பியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அந்த டீ-சர்ட்டை அணிந்து இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள தோனியின் மகள், ‘தந்தையை போல் பிள்ளை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
மெஸ்ஸி பரிசளித்த டீ-சர்ட்டில் பாரா ஜீவா என எழுதப்பட்டுள்ளது. மேலும், அதற்கு கீழ் மெஸ்ஸி கையெழுத்திட்டுள்ளார். இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. மகேந்திர சிங் தோனி கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 67 அப்டேட் – வில்லன் இவரா..இது லிஸ்ட்லயே இல்லையே!