Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமகேந்திர சிங் தோனி மகளுக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி அளித்த பரிசு..

    மகேந்திர சிங் தோனி மகளுக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி அளித்த பரிசு..

    கால்பந்து வீரர் மெஸ்ஸி தான் கையெழுத்திட்ட டீ-சர்ட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகளுக்கு பரிசளித்துள்ளார்.

    சமீபத்தில் கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்று, கோப்பையை தன் வசப்படுத்தியது. 

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவாவுக்கு தான் கையெழுத்திட்ட அர்ஜென்டினா அணியின் டீ-சர்ட்டை மெஸ்ஸி பரிசாக அனுப்பியுள்ளார். 

    இதைத்தொடர்ந்து, அந்த டீ-சர்ட்டை அணிந்து இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள தோனியின் மகள், ‘தந்தையை போல் பிள்ளை’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

    மெஸ்ஸி பரிசளித்த டீ-சர்ட்டில் பாரா ஜீவா என எழுதப்பட்டுள்ளது. மேலும், அதற்கு கீழ் மெஸ்ஸி கையெழுத்திட்டுள்ளார். இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. மகேந்திர சிங் தோனி கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    தளபதி 67 அப்டேட் – வில்லன் இவரா..இது லிஸ்ட்லயே இல்லையே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....