Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கைது செய்யப்பட்ட அதிமுகவினர்; புதுச்சேரியில் பரபரப்பு

    கைது செய்யப்பட்ட அதிமுகவினர்; புதுச்சேரியில் பரபரப்பு

    புதுச்சேரி முழு அடைப்பு போராட்டத்தின் போது அதிமுகவினரை போலீசார்  வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே அதிமுக மாநில செயலாளர் உட்பட ஏராளமான அதிமுக முக்கிய பிரமுகர்களை போலீசார் அதிகாலையில் அவர்களது வீட்டிற்கு சென்று கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    மேலும், தமிழக மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்தனர்.

    அவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது கைது செய்யப்பட்ட அதிமுக மாநில செயலாளர் உள்பட அதிமுக நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அரசு வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைத்து அதிமுக நிர்வாகிகளையும் உடனடியாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 20 ஆண்டு கால வரலாற்றில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் அறிவித்தவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    மகேந்திர சிங் தோனி மகளுக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி அளித்த பரிசு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....