Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'ஐஸ்வர்யாராயை பார்த்து நான் பொறாமை படுகிறேன் ' பொன்னியின் செல்வன் குறித்து மீனா உருக்கம்!

    ‘ஐஸ்வர்யாராயை பார்த்து நான் பொறாமை படுகிறேன் ‘ பொன்னியின் செல்வன் குறித்து மீனா உருக்கம்!

    இனி என்னால் அதை வெளியில் சொல்லாமல் இருக்க முடியாது. வாழ்நாளில் முதல் முறையாக நான் ஒருவரை பார்த்து பொறாமைப்படுகிறேன் என மீனா தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

    பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், பொன்னியின் செல்வன். நேற்று திரையரங்குகளில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பல கதாப்பாத்திரங்கள் குறித்தும் ரசிகர்கள் இணையங்களில், நேரில் என பேசி வருகின்றனர். இந்நிலையில், நடிகை மீனா தனது சமூகவலைதள பக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ள நந்தினி கதாப்பாத்திரம் குறித்து பேசியுள்ளார். 

     

    View this post on Instagram

     

    A post shared by Meena Sagar (@meenasagar16)

    அதன்படி, அவர் தெரிவித்துள்ளதாவது;

    இனி என்னால் அதை வெளியில் சொல்லாமல் இருக்க முடியாது. வாழ்நாளில் முதல் முறையாக நான் ஒருவரை பார்த்து பொறாமைப்படுகிறேன். நான் ஐஸ்வர்யா ராயை பார்த்துதான் பொறாமைப்படுகிறேன். காரணம் என்னவெனில், ஐஸ்வர்யா ராய் எனது கனவுப்பாத்திரமான நந்தினியில் அவர் நடித்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: எங்கப்பா ஓடுது பொன்னியின் செல்வன் – கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேள்வி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....