Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதாலி கட்டும் நேரத்தில் காவல்துறை வர, கல்யாணத்தை நிறுத்த....மணமகன் அதிர்ச்சி! -நடந்தது என்ன?

    தாலி கட்டும் நேரத்தில் காவல்துறை வர, கல்யாணத்தை நிறுத்த….மணமகன் அதிர்ச்சி! -நடந்தது என்ன?

    மைசூரில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்தி விட்டு சினிமா பாணியில் காதலனுடன் மணமகள் கைகோர்த்த சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த மணமகளுக்கும் எஸ்.பி.கோட்டையை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இதையொட்டி மைசூரில் உள்ள ஒரு மண்டபத்தில் உறவுகள் புடைசூழ மேள தாளத்துடன் மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்துக்கு தயாராகி கொண்டிருந்தனர். மணவறையில் மணமகன் காத்திருக்க, உறவுக்காரப்பெண்கள் மணப்பெண்ணை அழைத்து வந்தனர். திருமண கனவில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை தாலியை எடுத்து கட்டப்போக, அந்த நேரத்தில் அங்கு வந்த போலீசார், சினிமாவில் வருவது போல, திருமணத்தை நிறுத்தும்படி கூறியுள்ளனர்.

    அதிர்ச்சியடைந்த கல்யாண வீட்டுக்காரர்கள் காரணம் கேட்க, தாலிக்கட்டும் நேரத்தில் திடீரென்று மணப்பெண்…போலீசுக்கு தொடர்பு கொண்டு, தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், தனக்கு மற்றொருவருடன் திருமணம் நடத்த உள்ளனர். எனவே மாப்பிள்ளை பிடிக்காததால் எனக்கு திருமணம் செய்வதில் உடன்பாடு இல்லை. எனது விருப்பம் இல்லாமல் நடக்கும் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு எங்களிடம் புகார் தெரிவித்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். மேலும், இதனால்தான், போலீசார் திருமண மண்டபத்துக்கு விரைந்து சென்று மணப்பெண்ணுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும், மணப்பெண் பக்கத்து வீட்டு இளைஞரை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் அறிவுரைப்படி திருமண நேரத்தில் அவர் திருமணத்தை நிறுத்தியது தெரிய வந்தது. மணப்பெண் முன்பே போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் திருமண மண்டபத்திற்கு வந்த போலீசார் மணப்பெண்ணை அழைத்து சென்றனர்.

    ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் திருமண நிகழ்ச்சிக்காக செலவு செய்த 5 லட்ச ரூபாயைக் கொடுக்குமாறு பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் திருமண மண்டபம் போர்களமாக காட்சி அளித்தது.

    தாலி கட்டும் நேரத்தில் திடீரென திருமணத்தை நிறுத்தும் சம்பவங்கள் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தான் நாம் பெரும்பாலும் பார்த்திருப்போம். ஆனால் இங்கு தனக்கு விருப்பம் இல்லாத ஒரு திருமணத்தை நடத்த உறவினர்கள் தயாரானதை தடுக்க மணப்பெண்ணே போலீசாருக்கு புகார் கொடுத்து தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விக்ரம் வெளியாகும் அதே நாளில் மீண்டும் வெளியாகும் கேஜிஎஃப்! – கொளுத்துங்க வெடிய…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....