நடிகை மஞ்சிமா மோகனும், நடிகர் கௌதம் கார்த்திக்கும் தாங்கள் காதலில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நடிகர் நடிகைகள் ஒருவர் மீது ஒருவர் காதலில் விழுவது சினிமா ஆரம்பித்த காலந்தோட்டே இயல்பாக நடந்து வரும் ஒன்றுதான். இந்த வகையில், தற்போது நடிகை மஞ்சிமா மோகனும், நடிகர் கௌதம் கார்த்திக்கும் அதிகார்ப்பூர்வமாக இணைந்துள்ளனர்.
நவரச நாயகன் என்றழைக்கப்படும் நடிகர் கார்த்திக்கின் மகன், கௌதம் கார்த்திக். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இவர் உள்ளார். தற்போது சிம்புவுடன் இணைந்து பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மஞ்சிமா மோகனுக்கும், கௌதம் கார்த்திக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. தேவாராட்டம் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும்போது ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஆனால், வெளிவந்த செய்திகளை இருவருமே மறுக்கவில்லை. ஆதலால், ஏறத்தாழ மஞ்சிமா மோகனும், கௌதம் கார்த்திக்கும் காதலில் இருப்பது உறுதியானது. இருப்பினும் அவர்கள் தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை.
View this post on Instagram
இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் இருவருமே தங்களது காதலை புகைப்படத்துடன் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
நான் மூன்று வருடங்களுக்கு முன்பு முற்றிலுமாய் தொலைந்து போன சமயத்தில், நீ ஒரு காவல் தேவதை போல என் வாழ்வில் வந்தாய். வாழ்வைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய்! ஒவ்வொரு முறையும் நான் குழப்பத்தில் சிக்கியிருக்கையில், நீ என்னை சிக்கல்களிலிருந்து மேலே இழுக்கிறாய். என் குறைகளை ஏற்றுக்கொள்ளவும், அடிக்கடி நானாக இருக்கவும் நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய். மேலும், நான் உன்னிடம் நேசிக்கும் முக்கியமான ஒன்று என்னவென்றால், நான் நானாக இருப்பதையே விரும்பியவன் நீ.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ரசிகர்கள் மஞ்சிமா மோகன் – கௌதம் கார்த்திக் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘துணிவு’ பட புரமோஷனில் அஜித் பங்கேற்பா..? நடந்தால் ரசிகர்கள் காட்டில் மழைதான்…