மராட்டிய மாநில சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மராட்டிய அரசியலில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே பதவி விலகியதை அடுத்து, பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே கடந்த வாரம் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று மராட்டிய சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 164 வாக்குகள் பெற்று ஏக்நாத் ஷிண்டே பெருமான்மையை நிரூபித்து, தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், உத்தவ் தாக்கரே அரசில் துணை முதல்வராக பொறுப்பு வகித்த அஜித் பவாரை எதிர்கட்சித் தலைவராக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரவைத் தலைவர் ஜெய்ந்த் பட்டேல் முன்மொழிந்தார்.
மேலும், எதிர்கட்சித் தலைவராக அஜித் பவாரை மராட்டிய சட்டமன்றம் ஏற்றுக் கொண்டதாக அம்மாநில சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்ததை அடுத்து, எதிர்கட்சித் தலைவராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தனி நீதிபதியை நாடுங்கள்; ஓபிஎஸ்-க்கு உயர்நீதிமன்றம் அறிவுரை