மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தனு பகுதியில் 54.7 மி.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது.
தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சுமார் 20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மராட்டிய மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை மழை வெள்ளம், மின்னல், நிலச்சரிவு, மரங்கள் முறிதல் மற்றும் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுதல் உள்ளிட்ட சம்பவங்களில் 102 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்