பருவமழை தொடங்கியுள்ள இந்த நிலையில் சென்னையில் பலருக்கும் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண்வலி நோய் ஏற்பட்டு வருகிறது.
பொதுவாகவே மழைக்காலங்களில் காலநிலை மாற்றத்தால் இந்த ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் வலி நோய் ஆண்டுதோறும் ஏற்படுகிறது. இந்த மெட்ராஸ் ஐ ஏற்பட்டால், கண் உறுத்தல், கண் சிவப்பு நிறமாக மாறுதல், கண்களில் இருந்து அழுக்கு வெளியேறுதல், கண்ணீர் வடிதல் போன்றவை ஏற்படக்கூடும். இந்த கண் நோய் பொதுவாக குழந்தைகளுக்கு அதிகமாக பரவ வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனே கண் மருத்துவரை அணுகுவது அவசியம்.
இந்த நோய் மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய நோய் ஆகும். அதனால், தனி தனியே கைக்குட்டைகளை பயன்படுத்துதல் நல்லது. அதேபோல் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் வலிக்கிறது என கண்களை விரல்களால் அழுத்தி துடைக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள கண் மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களாகவே இந்தக் கண் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நோ ஃப்ரிட்ஜ் ? நோ கெமிக்கல் ? 3 மாதம் கெட்டுப்போகாத ‘ஆவின் டிலைட்’ பால் அறிமுகம்