எத்தையம்மன் பண்டிகை திருநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பல இன மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு படுகர் (Badagas) இன மக்களும் பல காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குலதெய்வம் எத்தையம்மன் ஆகும். எத்தை அம்மன் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்தப் பண்டிகையில் ஜெகதளா, ஒதனட்டி, காரக்கொரை, மல்லிக்கொரை, மஞ்சுதளா, பேரட்டி, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களைச் சேர்ந்த ஊர்மக்கள் கலந்து கொண்டு விழாவை நடத்துவர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான எத்தையம்மன் பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் இந்தப் பண்டிகைக்கு 8 ஊர் கிராம மக்களும் விரதம் இருந்து பாதயாத்திரை மேற்கொள்வர்.
படுகர் இன மக்களின் இந்த எத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நாளை உள்ளூர் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரீத் உத்தரவிட்டுள்ளார்.
இசைவெளியீட்டு விழாவுக்கு விஜய் வந்த விதம்… கருத்து தெரிவித்த இசையமைப்பாளர்..