Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தொடங்கிய தளபதி-67 படப்பிடிப்பு..உலறிய பிரபல நடிகர்

    தொடங்கிய தளபதி-67 படப்பிடிப்பு..உலறிய பிரபல நடிகர்

    நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. 

    மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் சறுக்கலை சந்தித்தது. அதேசமயம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் வெற்றியை சந்தித்தது. 

    இதைத்தொடர்ந்து, விஜய்யின் 67-ஆவது படத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணையவுள்ளனர் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 

    இதனிடையே, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்கள் இடத்தில் அதிகளவில் உள்ளது. 

    அதேசமயம், வாரிசு திரைப்படத்திற்கு பிறகான, அதாவது விஜய்யின் 67-ஆவது படத்தை குறித்த அதிகார அறிவிப்பு எப்போது வருமென்றும், படத்தின் படப்பிடிப்பு எப்போதென்றும் விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

    இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பங்குபெற்ற ஒரு நேர்காணலில் ‘தளபதி 67’ எனப்படும் விஜய்யின் 67-ஆவது படம் குறித்து தெரிவித்துள்ளார். அதன்படி, படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படப்பிடிப்பும் ஜனவரி மாதத்தில் தொடங்கும் என தெரிவித்தார். 

    அதன்படி, நேற்று ‘தளபதி 67’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்தச் செய்தியை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அவரின் ட்விட்டர் பதிவில், ‘தளபதி-67’ படப்பிடிப்பு தொடங்கியது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன். முதல் நாளே தூள்’ என தெரிவித்தார். 

    இதன்பின்னர், சிறிது நேரத்திலேயே தனது ட்விட்டை அவர் நீக்கிவிட்டார். மேலும், மன்னிப்பும் கோரினார். இதுவரையில்,  ‘தளபதி-67’ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆதலால், மனோபாலா தனது ட்விட்டை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இசைவெளியீட்டு விழாவுக்கு விஜய் வந்த விதம்… கருத்து தெரிவித்த இசையமைப்பாளர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....