அஜித் மற்றும் விஜய் போலவே அவர்களது ரசிகர்களும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அண்ணாமலையிடம் துணிவு, வாரிசு திரைப்படங்கள் ரிலீஸ் மற்றும் ரசிகர்களிடையே மோதல் உள்ளிட்ட சில கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர்.
இந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,
நடிகர் அஜித்தின் உழைப்பு அசாத்தியமானது என்றும், சினிமா திரையில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு மனிதன் இவ்வளவு வளர்ந்திருப்பது சாதாரண செயல் இல்லை என்றும் சாமானிய மனிதர்களுக்கு அவர் மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார்.
அதேபோல், நடிகர் விஜய் தனது நடிப்பை தொடர்ந்து மெருகேற்றி வந்திருப்பதாகவும், இந்த வயதிலும் ரப்பர் போன்று நடனம் ஆடுவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, நேரம் கிடைக்கும்போது துணிவு, வாரிசு திரைப்படங்களை பார்ப்பேன் என்றும் கூறினார். மேலும் அரசியலை பொறுத்தவரை துணிவாக இருப்பேன் என்றும் வாரிசு அரசியலை எதிர்ப்பேன் என்றும் தெரிவித்தார்.
இரண்டு பேரின் ரசிகர்களும் சண்டை போடக் கூடாது. விஜய்யும் அஜித்தும் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்வதாகவும், அவர்களைப் போன்றே அவர்களது ரசிகர்ளும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு சகோதரனாக கேட்டுக் கொள்வதாகவும் கூறினார்.
விஜய் பட நடிகருடன் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி காதலா?