Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மருத்துவத்திற்கு பணம் இன்றி தவிக்கும் பழம்பெரும் பிரபல நடிகை; உதவ முன்வந்த தமிழக அரசு

    மருத்துவத்திற்கு பணம் இன்றி தவிக்கும் பழம்பெரும் பிரபல நடிகை; உதவ முன்வந்த தமிழக அரசு

    பழம்பெரும் நடிகையான ஜெயக்குமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    பழம்பெரும் நடிகையான ஜெயக்குமாரி அந்தக்கால தமிழ்த் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் ஆவார். இவர் தன்னுடைய மகனுடன் வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஜெயக்குமாரி ஆறு வயது முதலே தமிழ்த்திரையுலகில் நடிக்கத் தொடங்கினார். இவர் தனது 14-வது வயதில் தமிழ்த் திரையுலகில் வெளியான நாடோடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

    இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த விட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சிகிச்சை பெற பணம் இல்லாத காரணத்தினால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ‘இனி நான் உதவி பெறுபவர்களின் காலில் விழ போகிறேன்’- ராகவா லாரன்ஸ் புதிய முடிவு!

    மேலும், தமிழில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்த நடிகைக்கு திரைப்  பிரபலங்கள் உதவ முன்வர வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இதனிடையே, நடிகை ஜெயக்குமாரி சிகிச்சைக்கான பணம் இன்றி தவிப்பது குறித்து அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஜெயக்குமாரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....