கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனைச் செய்து கொள்ளுங்கள். இதன் காரணமாக, எனது தில்லி பயணம் ரத்து செய்யப்பட்டது.
இவ்வாறு, அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
I have tested positive for Covid-19 with Mild symptoms and have isolated myself at home. Those who came in touch with me in last few days, kindly isolate yourself and get urself tested. My trip to Delhi stands cancelled.
— Basavaraj S Bommai (@BSBommai) August 6, 2022
குரங்கம்மை நோய் எதிரொலி; பொது சுகாதார அவசர நிலையை அறிவித்த அமெரிக்கா