Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'ஆடையின்றி வீடியோ கால்' மடாதிபதி தற்கொலையில் கைதான கல்லூரி மாணவி பகீர் வாக்குமூலம்

    ‘ஆடையின்றி வீடியோ கால்’ மடாதிபதி தற்கொலையில் கைதான கல்லூரி மாணவி பகீர் வாக்குமூலம்

    கர்நாடகாவில் மடாதிபதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மடாதிபதியின் சகோதரர், இளம்பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் இருக்கும் காஞ்சுகல் பாண்டே மடத்தில் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்கம் என்பவர். இவர் கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில், தனது மடாதிபதி பதவியையும் சொத்துகளையும் பறிக்க சிலர் தன்னை மிரட்டியதாக தெரிவித்திருந்தார். 

    இதைத்தொடர்ந்து, மடாதிபதியுடன் ஆடையின்றி வீடியோ கால் மூலமாக பேசி வந்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதில், கண்ணூர் மடத்தின் மடாதிபதி மிருதுந் ஜெயஸ்ரீ, பொறியியல் கல்லூரி மாணவியான நீலாம்பிகை மற்றும் வழக்கறிஞரான மாதேவையா ஆகிய மூவரும் சேர்ந்து மடாதிபதியை பெண்களின் வலையில் சிக்க வைத்ததாக கைது செய்யப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். 

    மேலும் இந்த விசாரணையில், பசவலிங்காவுக்கும் அவரது சகோதரர் மிருதுந் ஜெயஸ்ரீக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாகவும், இதனால் திட்டமிட்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. 

    இதையடுத்து மிருதுந் ஜெயஸ்ரீ மற்றும் மாதேவையாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

    இதையும் படிங்க: தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்! சென்னையிலும் கொட்டும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....