Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநன்றாக படித்தது குற்றமா..? மகளுக்காக மாணவனை கொன்ற கொடூர தாய்

    நன்றாக படித்தது குற்றமா..? மகளுக்காக மாணவனை கொன்ற கொடூர தாய்

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், அரசின் நியாய விலைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி மாலதி. ராஜேந்திரன் – மாலதி தம்பதியனருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் பெயர் பாலமணிகண்டன். 

    பாலமணிகண்டன் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளியில் ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பாலமணிகண்டன் கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர்-1) மதியம் வீட்டுக்கு வந்துள்ளான். சிறிது நேரத்தில் பாலமணிகண்டன் திடீரென வாந்தி எடுத்துள்ளான். 

    இதைத் தொடர்ந்து, மாலதி தனது மகனை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது மாணவன் பாலமணிகண்டன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பாலமணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே மாணவன் குடித்த குளிர்பானத்தை அவனது தாய் கொடுக்கச் சொன்னதாக கூறி பள்ளியின் காவலாளி கொடுத்தது தெரியவந்தது. 

    இந்தச் செய்தியால் பாலமணிகண்டனின் தாய் மாலதி தனது கணவர் ராஜேந்திரனுடன் பள்ளிக்கு சென்று பள்ளி காவலாளியை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்பேரில், பள்ளி நிர்வாகத்தினர், காவலாளியை அழைத்து விசாரணை நடத்தினர். 

    மேலும், பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பள்ளியில் பாலமணிகண்டன் வகுப்பில் பயிலும் சக மாணவி ஒருவரின் தாயார், காவலாளி தேவதாசிடம் குளிர்பானம் கொடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். 

    அந்த புகாரில், தனது மகன் பாலமணிகண்டன் கல்வி மற்றும் இதர கலைகளில் சிறந்து விளங்குவதால், இதை பொறுக்க முடியாமல் மாணவியின் தாயார் குளிர்பானத்தில் விஷம் கலந்து அதை காவலாளி மூலம் தனது மகனுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார். இதனிடையே விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான். ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கினர். 

    மேலும், அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காரைக்கால் ஆட்சியர் முகமது மன்சூர் உறுதியளித்தார். 

    இதன்பிறகு, அந்த மாணவியின் தாயாரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட காரைக்கால் பள்ளி மாணவனின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மாணவனின் உடலுக்கு ஜிப்மர் மருத்துவ குழு பிரேத பரிசோதனை மேற்கொண்டது. மாணவனின் உடலானது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. 

    இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் மாணவனின் உடலானது காரைக்கால் முல்லை நகர் பகுதியில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இதையும் படிங்க : “KGF ராக்கி” ஆக ஆசைப்பட்டு சீரியல் கில்லராக மாறிய 19 வயது இளைஞன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....