Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மறைந்தப் பின்னும் மூன்று விருது- நா.முத்துக்குமார் நிகழ்த்திய சாதனை!

    மறைந்தப் பின்னும் மூன்று விருது- நா.முத்துக்குமார் நிகழ்த்திய சாதனை!

    தமிழில் வெளியாகும் சிறந்த படங்களையும், அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விருது வழங்கும் விழாவை நடத்தி வந்தது. ஆனால், கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. 

    இந்நிலையில், தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.  இந்த விழாவில் 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 160 பேருக்கு விருது வழங்கப்பட்டது. 

    இதேபோல் சின்னத்திரை விருதுகள் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த வாழ்நாள் சாதனையாளர்கள், சிறந்த கதாநாயகன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு விருது வழங்கப்பட்டது. 

    மேலும், தமிழக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008-09-ம் கல்வியாண்டு முதல் 2013-14-ம் கல்வியாண்டு வரை பயின்றவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களின் மூலம் சிறந்த இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள் என 30 பேருக்கு விருது வழங்கப்பட்டது. மொத்தமாக, 314 திரையுலக கலைஞர்களுக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டது.

    இப்படியிருக்கையில், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு மூன்று விருதுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விருதை நா.முத்துக்குமாரின் மகனும், மகளும் இணைந்து பெற்றுக்கொண்டனர். தொடர்ச்சியாக, 2012, 2013 மற்றும் 2014 ஆகிய மூன்று வருடங்களுக்கான சிறந்த பாடலாசிரியர் விருது நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு கிடைத்தது.

    2012 – ல் வெளிவந்த பல திரைப்படங்களுக்கும், 2013-ல் தங்க மீன்கள், 2014-ல் சைவம் திரைப்படத்திற்காகவும் நா.முத்துக்குமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....