காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
சமீப காலமாகவே கன்னடத்தில் வெளிவரும் திரைப்படங்கள் இந்திய அளவில் நற்பெயரை சம்பாதித்து வருகின்றனர். உதாரணத்திற்கு கே.ஜி.எஃப், 777 சார்லி போன்ற திரைப்படங்களை சொல்லலாம். இந்த வரிசையில் இணைந்த திரைப்படம், காந்தாரா. இத்திரைப்படத்தை கே.ஜி.எஃப் திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியிடப்பட்ட இத்திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த சில நாள்களில் டப் செய்யப்பட்டு முக்கிய மொழிகளில் வெளியிடப்பட்டன.
இத்திரைப்படத்தை ரஜினிகாந்த், தனுஷ் உட்பட பல திரையுலக பிரபலங்களும் காந்தாராவைப் பாராட்டி பேசினர். 16 கோடி அளவில் தயாரான இத்திரைப்படம் 375 கோடி வசூல் செய்து அசத்தியது.
இந்நிலையில், காந்தாரா திரைப்படத்தின் அடுத்தப் பாகம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. ஹோம்பாலே ப்லிம்ஸ் தயாரிப்பு நிறுவனர் விஜய் கிரங்கந்துர் காந்தாரா-2 ஆம் பாகம் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதன்படி, காந்தாரா-2 ஆம் பாகம் உருவாவது உறுதி. ஆனால் இது காந்தாராவின் அடுத்த பகுதியாக இல்லாமல் முன்பகுதியாக உருவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் கூறியதாவது;
காந்தாரா 2-ஆம் பாகமானது கிராம மக்களுக்கும் அரசனுக்கும் உள்ள பிரச்னையாக உருவாக உள்ளது. அரசனை சுற்றியுள்ள நிலங்களையும் மக்களையும் காப்பாற்ற இயற்கையுடன் போராடும் கதையாக இருக்கும்.
ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பான் இந்தியப் படமாக அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியட திட்டமிட்டுள்ளோம். கர்நாடகத்தின் கடற்கரையோரத்தில் ரிஷப் ஷெட்டி இது குறித்து ஆராய்ச்சி செய்து கதை எழுதி வருகிறார். படத்தின் பட்ஜெட் மட்டுமே அதிகரித்துள்ளது. கதை கூறும் முறை, ஒளிப்பதிவு என அதே தரத்தில் இருக்கும். படத்தில் நடிப்பவர்கள் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
என்னப்பா இப்படி பண்றியே… சிரிப்பலைகளை வரவழைத்த ரோஹித் சர்மாவின் செயல்