Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'நாயகன்' மீண்டும் வரார்..! 35 வருடத்திற்கு பின் இணையும் கமல் - மணிரத்னம்... எகிறும் எதிர்பார்ப்பு

    ‘நாயகன்’ மீண்டும் வரார்..! 35 வருடத்திற்கு பின் இணையும் கமல் – மணிரத்னம்… எகிறும் எதிர்பார்ப்பு

    கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

    கமல்ஹாசனின் பிறந்தநாளை கோலகலமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று வெளிவந்த இந்த ஒரு அப்டேட் ரசிகர்களை இன்னும் குதூகலத்துடன் கமல்ஹாசனின் பிறந்தநாளை கொண்டாட வைத்துள்ளது. அந்த அப்டேட் ‘நாயகன் மீண்டும் வர’ என்ற வரியை உண்மையாக்கியது போல் உள்ளது. 

    ஆம், கமல்ஹாசனின் திரைப்பட வாழ்வில் மிக முக்கியமான ஒரு திரைப்படமென்றால் அது நாயகன். அத்திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருப்பார். மிகப்பெரிய ஹிட் அடித்த நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னமும், கமல்ஹாசனும் இணையவே இல்லை. இந்நிலையில், 35 வருடங்களுக்கு பிறகு தற்போது இருவரும் மீண்டும் இணையவுள்ளனர். 

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என மூன்று முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ள திரைப்படத்தை, இயக்குனர் மணிரத்னம் இயக்க கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். கமலின் 234 -வது திரைப்படமாக உருவாகவுள்ள இத்திரைப்படம் குறித்து நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், ரசிகர்கள் குஷியாகவுள்ளனர். 

    மணிரத்னம் இயக்கத்தில் இவ்வருடம் வெளிவந்த பொன்னியின் செல்வனும் சரி, கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரமும் சரி இரண்டுமே மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக மாறியது. இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள அப்டேட், இவர்களின் வெற்றி வரிசையில் இணையுமா என்ற ஆவலை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: நடிகர் விஜய் குரலில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’ பாடல்…இனி ஆட்டம்தான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....