இந்தி திரையுலக தம்பதியான ஆலியா பட் – ரன்பீர் கபூர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமானவர்கள் ஆலியாபட் மற்றும் ரன்பீர் கபூர். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், தனது கணவர் ரன்பீர் கபூருடன் சேர்ந்து மருத்துவமனையில் குழந்தையின் உருவத்தை கணினி பரிசோதனையில் பார்த்தவாறு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “எங்கள் குழந்தை.. விரைவில் வரவுள்ளது” என தெரிவித்து இருந்தார்.
அதே சமயம் இருவரும் இணைந்து பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் நடித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து இந்தத் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியானது. பிரம்மாஸ்திரா திரைப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஊடகத்தில் வெளியாகி இருக்கிறது.
இதனிடையே, நேற்று ஆலியாபட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இதுதான் எங்கள் வாழ்க்கையின் சிறந்த செய்தி. எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோராக எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, ஆலியாபட் மற்றும் ரன்பீர் கபூர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘கலைஞனை உருவாக்கும் வல்லமை படைத்தவன்’: கமல்ஹாசன் பிறந்த நாள் சிறப்பு பதிவு!