தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு, பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தில் அறிமுகமானார். பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி மற்றும் விவேகம் என பல படங்களில் தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார், காஜல் அகர்வால். தெலுங்கில் ராம்சரண், சிரஞ்சீவி, மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோருடனும் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மும்மொழிகளில் நடித்து வந்தாலும் காஜல் அகர்வாலை திரையுலகின் முன்னணி நடிகையாக்கியது, ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘மஹதீரா’ திரைப்படம் தான். திரையுலகில் பல முன்னணி கதாநாயகிகள், திரைப்பயணத்திற்குப் பிறகு திருமண பந்தத்தில் இணைந்து விடுவார்கள். அதைப்போல நடிகை காஜல் அகர்வால், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் கிச்லுவை காதலித்து வந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் வாழ்க்கைக்கு புதிய அத்தியாயமாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. “என் வாழ்வின் காதல் நீ” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
சமீபத்தில் காஜல் அகர்வால் – கவுதம் கிச்லு தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த ஆண் குழந்தைக்கு நீல் கிச்சிலு என பெயரிட்டுள்ளார் காஜல் அகர்வால். கடந்த சில நாட்களுக்கு முன்பாக, அன்னையர் தினத்தை முன்னிட்டு, தனது மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். நடிகை காஜல் அகர்வால்.
இந்நிலையில் நேற்று தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள காஜல் அகர்வால், என் வாழ்வின் காதல் நீ என தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் பலர் விரும்பியுள்ள நிலையில், வைரலாக பரவி வருகிறது.
உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் திரும்பிய இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா முக்கிய அறிவிப்பு