இந்திய கடற்படையில் உள்ள குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் காலியாக உள்ள 112 குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும், கடற்படை அல்லது முப்படைகளில் ஏதாவதொன்றில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு ஆண்டு பாதுகாப்புத் துறை சார்ந்த தொழிற்சாலையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பணி அனுபவம், மருத்துவத்தகுதி, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் செப்டம்பர் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு www.indiannavy.nic.in என்ற இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அனுகவும்.