ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் என்ற மாவட்டத்தில் முத்தூட் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் போல் திடீரென 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் முத்தூட் ஊழியர்களை பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளனர்.
குறிப்பாக, தன்பாத் முத்தூட் நிதி நிறுவனத்தின் மேனஜர் விக்ரம் ராஜை மிரட்டி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து துப்பாக்கியால் என்கவுண்டர் செய்தனர். இதில் ஒரு கொள்ளையன் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் படுகாயத்துடன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த துப்பாக்கிச்சூடு குறித்து இதுவரை முழு அளவிலான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : திடீர் மாரடைப்பால் மரணமடைந்த அமைச்சர்…பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை