Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நவீன தொழில் நுட்பத்துடன் மீண்டும் மிரட்ட வரும் 'அவதார்' - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

    நவீன தொழில் நுட்பத்துடன் மீண்டும் மிரட்ட வரும் ‘அவதார்’ – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

    உலகெங்கும் திரைப்பட ரசிகர்களை கவர்ந்த அவதார் மீண்டும் திரைக்கு வருகிறது..

    அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தை, ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். 

    கடந்த 2009 ஆம் ஆண்டு ‘அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதார் திரைப்படம் பல மாயங்களை நிகழ்த்தியது. கூடவே வசூல் சாதனைகளையும் நிகழ்த்தியது. 

    அவதார் திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தபோதே, இத்திரைப்படத்தில் புதுமையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. 

    இந்நிலையில், அவதார் திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என ரசிகர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதையடுத்து, அவதார் படத்தின் அடுத்த பாகங்களை உருவாக்க உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். 

    இதையும் படிங்க: ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு – ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள்

    அதன் தயாரிப்பு பணிகள் இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் அவதார் 2-ம் பாகம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அவதார் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் அவதார் 1-ம் பாகத்தை மீண்டும் திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டது. அதன்படி வரும் செப்டம்பர் 23-ந்தேதி அவதார் முதல் பாகம் மீண்டும் திரைக்கு வர உள்ளது. ஐமேக்ஸ் வெர்ஷனில் அவதார் வெளிவரவிருக்கிறது.

    குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே அவதார் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....