நாட்டின் முதல் சோலார் கிராமம் என்ற பெருமையை குஜராத் மாநிலத்திலுள்ள மோதிர என்ற கிராமம் பெற்றுள்ளது.
குஜராத் மாநிலம், மோதிர என்ற கிராமம் முழுவதும் சூரிய சக்தியை வைத்து மட்டுமே அனைத்து சதானங்களையும் மக்கள் பெற்று வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் சூரிய தகடுகள் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் 24 மணி நேரமும் மின்சாரத்திற்கு பதில், சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, பகலில் சூரிய தகடுகள் மூலம் நேரடியாக மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. இரவில் தானியங்கி பேட்டரி மூலம் சேமித்த மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது.
சூரிய கோயிலுக்கு மிகவும் புகழ்பெற்ற இந்த மோதிர கிராமம் தற்போது சூரிய மின்சக்திக்கும் நாட்டின் முதல் உதாரணமாககியுள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் 650 குடும்பங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்து மண்பாண்டத் தொழில், தையல் தொழில், விவசாயம் மற்றும் சமயல் போன்ற அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
சூரிய மின் சக்தி உற்பத்தியை விடவும் அதன் நுகர்வு குறைவு என்பதால், அதற்குரிய பணம் அரசாங்கத்தால் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: பெண்களே இனி சலூன் போகும்போது உஷார்! பக்கவாதத்தை ஏற்படுத்தும் ‘பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக்’