Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா vs இலங்கை; இன்று நடைபெறும் இறுதிப்போட்டி... வெற்றி யாருக்கு?

    இந்தியா vs இலங்கை; இன்று நடைபெறும் இறுதிப்போட்டி… வெற்றி யாருக்கு?

    இலங்கை மற்றும் இந்திய அணிக்கு இடையேயான இருபது ஓவர் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. 

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது. 

    கடந்த 3-ஆம் தேதி 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது இருபது ஓவர் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி இலங்கையை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது. 

    இதைத்தொடர்ந்து, புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியடைந்தது. 

    இதனால், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன. இந்நிலையில், இன்று மூன்றாவது இருபது ஓவர் போட்டி நடைபெறவுள்ளது. 

    இன்றையப் போட்டியில் வெற்றிப் பெறும் அணியே இந்த இருபது ஓவர் தொடரின் வெற்றி அணியாகும். ஆதலால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தப் போட்டியானது, இன்று இரவு 7 மணிக்கு ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    அமேசான் பணிநீக்க நடவடிக்கை; இந்தியாவில் எத்தனை பேர்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....