Saturday, March 23, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு மற்றும் துணிவின் முதல் காட்சிகள் எப்போது? - வெளிவந்த அப்டேட்..

    வாரிசு மற்றும் துணிவின் முதல் காட்சிகள் எப்போது? – வெளிவந்த அப்டேட்..

    துணிவு திரைப்படத்தின் முதல் காட்சி 11-ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சி 4 மணிக்கும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    விஜய் – அஜித்குமார் இருவரும் தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திரங்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இருவரின் திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகும் நாள் திருவிழாவாக மாறிவிடுகிறது. 

    இவர்கள் இருவரின் திரைப்படமும் வெவ்வேறு நாளில் தனித்தனியாக வெளியாகும் நாளே திருவிழா கோலம் புகும் என்றால், இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானால் அது திருவிழாக்களின் திருவிழா தான்.

    அந்த வகையில் தற்போது, விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும், அஜித்குமார் நடிப்பில் துணிவு திரைப்படமும் உருவாகியுள்ளது. இந்த இரு திரைப்படங்களும் வருகிற பொங்கலுக்கு வெளியாகுமென்று கடந்த மூன்று மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. 

    சமீபத்தில் வாரிசு திரைப்படமும், துணிவு திரைப்படமும் வருகிற 11-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. இதனால், இரு திரைப்படங்களின் நேருக்கு நேர் மோதல் என்பது அதிகாரப்பூர்வமானது. 

    இந்நிலையில், தற்போது இரு திரைப்படங்களின் முதல் காட்சி குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது. அதன்படி, துணிவு திரைப்படத்தின் முதல் காட்சி 11-ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சி 4 மணிக்கும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களின் டிரெய்லரும் சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா vs இலங்கை; இன்று நடைபெறும் இறுதிப்போட்டி… வெற்றி யாருக்கு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....