இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 33.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப்பெற்ற நிலையில், இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
மூன்றாவது டெஸ்ட்டிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியுள்ள இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 12 ரன்களிலும், சுப்மன் கில் 21 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதையடுத்து களத்திற்கு வந்த புஜாரா ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சியளித்தார். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. கோலி மட்டும் அதிகபட்சமாக 52 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது. இதற்குப் பிறகு இந்திய அணியின் மீதமுள்ள மூன்று விக்கெட்டுகளும் வீழ்ந்தன.
மொத்தத்தில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 33.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. மேத்யூ குனேமன் விக்கெட்டுகளும் லயன் 3 விக்கெட்டுகளும் மர்ஃபி 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
ஒருநாள் உலகக் கோப்பையிலும் பும்ரா இல்லையா? – வெளிவந்த அதிர்ச்சி தகவல்