இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப்பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது. அந்த அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. ஹேண்ட்ஸ்காம்ப் 7, கிரீன் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இதன்பின்பு, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சீராக விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 186-க்கு உயர்ந்த பிறகு ஹேண்ட்ஸ்காம்ப், அஸ்வின் பந்தில் தனது விக்கெட்டை வீழ்த்தினார். இந்த விக்கெட்டிற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸ்திரேலிய வீரர் கிரீன் 21 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆக, அடுத்து ஸ்டார்க், மர்ஃபியை போல்ட் செய்து அசத்தினார் உமேஷ் யாதவ். மேலும், அஸ்வினும் தன் பங்குக்கு அலெக்ஸ் கேரி, லயனின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மொத்தத்தில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் எதிர்பாராதவிதமாக 76.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். இந்திய அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
ரஜினியின் அடுத்தப் படம் இவருடன்தான்; வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…