இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப்பெற்ற நிலையில், இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
மூன்றாவது டெஸ்ட்டிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியுள்ள இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 12 ரன்களிலும், சுப்மன் கில் 21 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதையடுத்து களத்திற்கு வந்த புஜாரா ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சியளித்தார். தற்போது வரை இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.
ஒரே நபர் பல பெயர்களில் விந்தணு தானம்… கண்டுபிடித்த தம்பதியினர்கள்