உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா காலிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தியாவில், சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் 15-ஆவது ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதன்படியே தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில், நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், இரு அணிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு கோல்கள் அடித்தன.
மொத்தத்தில், இரு அணிகளும் தலா மூன்று கோல்கள் அடித்தன. இதனால் போட்டியானது டிராவில் முடிந்தது. பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட “ஷூட் அவுட்’ வாய்ப்பில் நியூஸிலாந்து 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்தத் தோல்வியின் மூலம் ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது. உலகக் கோப்பை ஹாக்கி தொடரை நடத்தும் இந்திய அணியே தொடரில் இருந்து வெளியேறிய சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு; 3 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்