உலக சாம்பியன்ஷிப் தொடருக்காக, இந்திய ரசிகர்கள் இலங்கை -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் தற்போது நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. ஏறத்தாழ நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய உள்ளது உறுதியாகவிட்டது.
இந்நிலையில், உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்காக இந்தப் போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால், டிராவை நோக்கி போட்டி செல்வதால் உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்பு நியூசிலாந்து கையில் உள்ளது.
கிறிஸ்ட்சர்ச்சில் இலங்கை அணி நிர்ணயித்த 285 ரன் நோக்கி நியூசிலாந்து விளையாடி வருகிறது. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றாலோ, டிரா செய்தாலோ இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும்.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து வெற்றிக்கு இன்னும் 257 ரன்கள் தேவைப்படுகிறது. அதனால் இந்திய ரசிகர்கள் இலங்கை -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.
ஆஸ்கரை கைப்பற்றிய ‘நாட்டு நாட்டு’ மற்றும் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்..